11.05.2011

வடமராட்சி வடக்கு பிரதேச செயலக பண்பாட்டு விழாவில் கலை கலாசார இலக்கிய மன்றத்தினர்

வடமராட்சி வடக்கு பிரதேச செயலக பண்பாட்டு விழா பிரதேசசெயலர் வரதீஸ்வரன் தலைமையில் 05 .11 .2011 அன்று பருத்தித்துறையில் நடைபெற்றது.இதில் கலை கலாசார இலக்கிய மன்றத்தினர் மற்றும் பொலிகை கலை இலக்கிய மன்றத்தினரின்  தமிழ் பெரியாரின் வேடப்புனைவுகள் இடம்பெற்றது. மற்றும் வல்வை மகளிர் மகாவித்தியாலய மாணவியரின் ஒயிலாட்டம் மற்றும் வரவேற்பு நிகழ்வுகளும் இடம்பெற்றது.இது தவிர பொலிகை சிவலிங்கத்தின் கம்படி சிலம்படி மற்றும் கரகாட்டம் என்பன இடம்பெற்றன. இதனை தொடர்ந்து தமிழர் பாரம்பரிய கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இதில் பரிசளிப்பு விழாவின் போது வல்வை மாணவ மாணவிகளும் பல பரிசில்களை பெற்றனர்.