புலம்பெயர் வல்வையர்களே
எமது மன்றத்தின் சார்பில் எமது வல்வையின் கலை இலக்கிய கலாசார விருத்திக்காக கடந்த ஒரு வருடமாக பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். எனினும்.நிதி பற்றாக்குறை காரணமாக பலவற்றை நிறைவேற்ற முடியவில்லை.இருந்தும் எமது மன்ற உறுப்பினர்களின் அயராத முயற்சியால் சில செயற்திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.அவையாவன
கலை இலக்கிய விழாவை நடத்தியமை
கலை இலக்கிய போட்டிகளை நடத்தி விருதுகள் வழங்கியமை.
நெய்தல் சஞ்சிகை வெளியிட்டமை.
போன்ற சில திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.மேலும் எமது செயற்பாடுகளை மேற்கொள்ளவும் எமது வல்வையின் கலை இலக்கிய கலாசாரத்தை விருத்தி செய்யவும் புலம்பெயர் உறவுகளின் உதவியை நாடி நிற்கின்றோம்.
நன்றி
கலை கலாசார இலக்கிய மன்றம்
வல்வெட்டித்துறை



